ஶ்ரீ ஸத்ய நாராயண அஷ்டோத்தர ஶத நாமாவளி. ஶ்ரீ ஸத்ய நாராயண அஷ்டோத்தர ஶத நாமாவளி என்பது மகாவிஷ்ணுவின் அவதாரமான, சத்தியத்தின் (உண்மை) வடிவமாகத் திகழும் ஶ்ரீ ஸத்ய நாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 புனிதப் பெயர்கள் ஆகும். சத்ய நாராயண பூஜையின் ஒரு முக்கிய பகுதியாக இது விளங்குவதோடு, நற்பலன்களைப் பெறத் தினசரி வழிபாட்டிலும் இதைப் பாராயணம் செய்யலாம்.
சித்ரா பௌர்ணமியும் கள்ளழகர் வைகையில் எழுந்தருளலும் ! ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம் ... முன்னுரை : சித்திரை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மதுரையின் மாபெரும் சித்திரைத் திருவிழாவும் , சித்ரா பௌர்ணமியும் தான் . சைவமும் வைணவமும் கைகோர்க்கும் உலக மகா ஆன்மீகப் பெருவிழா இது . சித்ரா பௌர்ணமி அன்று நம் பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் சித்திரகுப்தருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன . அதே நன்னாளில் , தன் பக்தன் ஒருவனுக்காகத் திருமாலிருஞ்சோலையிலிருந்து இறங்கி வந்து , கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் கண்கொள்ளாக் காட்சியும் நிகழ்கிறது . வழிபாட்டுக்குரிய சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் : இந்த நன்னாளின் முழுமையான பலனைப் பெற , நாம் உச்சரிக்க வேண்டிய இரண்டு பிரத்யேக ஸ்லோகங்கள் : சித்திரகுப்தர் தியான ஸ்லோகம் : சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம் லேகநீ பத்ர தாரிணம் | சித்ரரத்னாம்பரதரம் மத்யகாம் நமாம்யஹம் || ( மிகுந்த அறிவாளியும் , தன் கைகளில் ஏடும் எழுத்தாணியும் ஏந்தியவரும் , அ...

